திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

