திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள வக்ஃ போர்டுக்கு சொந்தமான அன்னார் பாக் தர்காவை நள்ளிரவில் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். சம்பவ இடத்தில் வந்த தில்லை நகர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மூன்று நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பழமையான தர்கா மர்ம நபர்களால் இடிக்கப்பட்ட சம்பவம் உழவர் சந்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.