ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த்,. இவர் போதைப்பொருளான கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் கடந்த 17ம் தேதி கைதான அதிமுக நிர்வாகி பிரதீப் என்பவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கொகைன் பயன்படுத்தியதை போலீசார் உறுதி செய்தனர்.
அதன்பேரில் இன்றுஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் இன்று பிற்பகல் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. இவர் ரூ- 5 லட்சம் அளவுக்கு இதனை வாங்கி உள்ளார். அதாவது 40 முறை கொகைன் வாங்கி பயன்படுத்தியது் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த வழக்கில் அதிமுகநிர்வாகி பிரதீப் குமார் முதல் குற்றவாளியாகவும், கானா நாட்டை சேர்ந்த ஜான் 2ம் குற்றவாளியாகவும், ஸ்ரீகாந்த் 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.