Skip to content

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார், ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்பொழுது…
திருச்சி மாநகராட்சி பொறுத்தவரை மாநகரில் சுமார் 40,000 நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு அதில் 30 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது திருச்சி மாநகராட்சியில் நான்கு இடங்களில் நாய்கள் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது.25வது வார்டில் ஒரு நாய் ஐந்து பேரை கடித்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து அந்த நாயை பிடித்து அடைத்து வைத்துள்ளோம்.மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாட்டிலேயே திருச்சி மாநகராட்சியில் தான் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது இந்த மாதம் 313 கால்நடைகள் மீட்கப்பட்டு ரூபாய் 7 லட்சம் 87 ஆயிரம் பணம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் மேரிஸ் பாலம் பாலக்கரை ராமகிருஷ்ணா பாலம்சீரமைக்கப்படவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார் இந்த நேரத்தில் நான் விளக்கம் சொல்ல வேண்டி உள்ளது திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தபோது எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.அதன் பிறகு திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன குறிப்பாக அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 851 கிலோமீட்டர் பாதாள சாக்கடை பணி மற்றும் 75 கிலோமீட்டர் குடிநீர் திட்டம் போன்றவற்றை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தியது .இதுவரை நான்கு ஆண்டுகளில் 2000 கோடிக்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள் மாநகராட்சிக்கு செய்யப்பட்டு உள்ளது இதேபோல் மாரீஸ் பாலம் இடிக்கும் பணியைரயில்வே நிர்வாகம் செய்து வருவதால் தாமதமாகிறது.
அதேபோலஜங்ஷன் பாலமும் ரயில்வே நிர்வாகத்தால் தாமதமாகிறது பாலக்கரை மற்றும் ராமகிருஷ்ணா பாலத்தை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முயன்ற போதுபோலீசார் மாரீஸ் பாலம் பணி முடிந்த பிறகு மேற்கண்ட இரண்டு பாலத்தை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.நிலைமை இப்படி இருக்க அவர் அரசியல் பணிக்காக ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவது சரியானது அல்ல.பஞ்சபூர். பேருந்து நிலையத்தில் கடைகள் கட்ட மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி இருப்பதால் தாமதமாகி வருகிறது.

ரெக்ஸ் (காங்):-
கடந்த மாதம் வாய்க்கால்களை சுத்தம் செய்ய நான் வைத்த கோரிக்கையினை நிறைவேற்றிய மேயருக்கும் ஆணையருக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். புதிய திட்டங்களுக்காக சாலையினை சேதப்படுவது, செப்பனிடுவது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறவேண்டும். பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகரத்துக்கு நுழைய அனுமதி மறுக்கவேண்டும்.
செந்தண்ணீர்புரம் சங்கிலியாண்டபுரம் வழிதடத்தில் பயணிக்கும் டவுன் பஸ்சுகள் ஒருவழிப்பதையாக பயணிக்க வழிவகை செய்யவேண்டும்.
ஜவகர் (காங்):-எனது மாடில் மழை நீர் வடிகாலைசரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோன்று நீண்ட காலமாக திருவரங்கத்தில் அடிமைப் பிரச்சனை நிலவி வருகிறது.தொடர்பாக மாநகராட்சி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துஅரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேபர் அன்பழகன்:-இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது எனவே இதில் நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இந்த பிரச்சனையால் திருவரங்கத்தில் ரூபாய் 2 கோடிக்கு வரிவசூல் செய்ய முடியாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுரேஷ் (மார்க்சிஸ்ட்) :-குப்பை அள்ளும் பணியைமேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் 10 சதவீதம் சம்பளத்தை உயர்த்த மாநகராட்சி அனுமதி வழங்க உள்ளது.இந்த நிறுவனம் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்து தருகிறார்களா?இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஆணை போட்டுள்ளார்.அந்த ஆணை கடிதத்தை மேயரிடம் காண்பிக்கிறேன்.இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொடி கம்பத்தை அகற்றக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளோம் அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த கட்சியின் கொடிக்கம்பத்தையும் அகற்றக்கூடாது.சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அதே சமயத்தில் தனியாரிடம் அதனை கொடுக்காமல் அரசு நடத்த வேண்டும்.

அம்பிகாபதி அதிமுகஎனது வாடில் மெராய் சிட்டிஎதிரே உள்ள அரசு இடத்தில் சமுதாய கூடம்கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விமான நிலைய ரோடு பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
பஞ்சப்பூரில் பேருந்து நிலையத்தில் கடைகள் திறக்க மேலும் விடுவதற்கு முன்பு லாரி முனையத்திற்கு கடைகள் திறக்க ஏலம் விடுவது ஏன்.பஞ்சப்பூர். பேருந்து நிலையம் திறக்கப்படாமல் இருப்பது ஏன்,பாலக்கரை ராமகிருஷ்ணா பழுதடைந்த பாலம் சாலை இன்னமும் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்? அதற்கு மேயர் பதில் கூறுவதற்கு முன்பு கவுன்சிலர்கள் முத்து செல்வம் காஜா மலை விஜி ,நீலாவேலு
ஆகிய கவுன்சிலர்கள் எழுந்து நின்று மாறி மாறி பேசினார்கள்.

இதனை கேட்ட அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி மற்றும் அரவிந்தன் ஆகியோர் மேயரிடம் கேள்வி கேட்ட போது கவுன்சிலர்கள் பதில் சொல்வது நியாயமா? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பிறகு மேயர் அன்பழகன் திமுக கவுன்சிலர்களைஅமர சொல்லி பேசினார்.
சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்):-சொத்து வரிக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதனை சரி செய்ய வேண்டும். நகர விற்பனை குழு தேர்தல் நடைபெற்றுநிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்ட பிறகு அவர்கள் பதவியேற்பு செய்யப்படாமல் இருக்கிறது. மேயர் அன்பழகன் விரைவில் அவர்கள் பதவி ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) எனது வார்டில் உள்ள அம்பேத்கர் சிலை கேட்அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் கேட் போட்டுசிலை உள்ள பகுதி முழுவதும் சீரமைத்து சரி செய்து நடவடிக்கை எடுத்த கமிஷனர், மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரட்டை வாய்க்காலில் குப்பைகள் அதிக அளவு சேர்ந்து வருகிறது.எனவே அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி எஸ் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு சாலை வசதி செய்து தருவதாக கூறியிருந்தோம். அதனை நிறைவேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) எனது வார்டில் மகாத்மா காந்தி பள்ளி அருகில் மழை நீர் வடிகால் சிலாப்புகள்பழுதடைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேசன் கடை பழுதாகி உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.உக்கிர காளியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிளாட்பாம்மை சரி செய்ய வேண்டும்.

சங்கர் ( திமுக ) :- எனது வாடில் கடைகள் அதிகமாக இருப்பதால் 40 வாட்ஸ் மின்விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி வெளியேறும் கழிவு நீரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிந்தன் (காங்) :-எனது வார்டில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக பொது நிதியிலிருந்து வேண்டிய நிதியை கூடுதலாக பெற்று தர வேண்டும். மின்விளக்குகள் நிறைய இடத்தில் புதிதாக போட வேண்டி இருக்கிறது.பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேண்டும்.

அப்பீஸ் முத்துகுமார் (மதிமுக):எனது வார்டில் வரி வசூல் செய்யும் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கூட்டத்தில் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் கனரக சரக்கு வாகன முனையத்தில் அமைக்கப்படும் கடைகளை ஏலம் எடுப்பது ,திருச்சி மாநகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட மருத்துவமனை சாலையில் ரு 3 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிக்கு இட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!