தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த சூட்கேசை அதிகாரிகள ஆய்வு செய்தபோது அதில் ஹைட்ரோபோலிக் உயர் ரக கஞ்சைவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 9கோடி இருக்கும். இது தொடர்பாக கடத்தி வந்தவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.9 கோடி இருக்கும். கடத்தி வரப்பட்ட 9.9 கிலோ உயர் ரக கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.