Skip to content

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை குவித்து முதலிடத்​துடன் நிறைவு செய்​திருந்​தது. அந்த அணி 2014-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் முதன்​முறை​யாக பிளே ஆஃப் சுற்​றில் விளை​யாடு​கிறது.

நடப்பு சீசனில் பஞ்​சாப் அணி​யின் பிரப்​சிம்​ரன், பிரியன்ஷ் ஆர்யா சிறப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றனர். நடு​வரிசை​யில் ஜோஷ் இங்​லிஷ், ஸ்ரேயஸ் ஐயர் பலம் சேர்த்து வரு​கின்​றனர்.

பின்​வரிசை​யில் நேஹல் வதே​ரா, ஷசாங் சிங் ஆகியோர் தங்​களது அதிரடி​யால் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றும் திறன் கொண்​ட​வர்​களாக திகழ்​கின்​றனர்.

பந்​து​வீச்​சில் தென் ஆப்​பிரிக்​கா​வின் மார்கோ யான்​சன், ஐசிசி உலக சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டிக்கு தயா​ராகு​வதற்​காக தாயகம் திரும்பி உள்​ளார். இதனால் அவர், பிளே ஆஃப் சுற்​றில் விளை​யாட​மாட்​டார். இது பஞ்​சாப் அணிக்கு சற்று பின்​னடைவை கொடுக்​கக்​கூடும்.

விரலில் ஏற்பட்ட  காயம் காரணமாக கடைசி இரு லீக் ஆட்​டங்​களில் விளை​யா​டாத சுழற்​பந்து வீச்​சாள​ரான யுவேந்​திர சாஹல் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும்.

சுழலில் அவருடன் ஹர்​பிரீத் பிராரும் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் சீரான திறனை வெளிப்​படுத்தி வரும் அர்​ஷ்தீப் சிங், பெங்​களூரு அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுப்பார் என நம்பலாம்.

பெங்​களூரு அணி தனது கடைசி ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் 228 ரன்​கள் இலக்கை துரத்​திய பெங்​களூரு அணி 8 பந்​துகளை மீதம் வைத்து 18.4 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 230 ரன்​கள் குவித்து வெற்றி பெற்று அனை​வரை​யும் வியக்​க​வைத்​தது.

பொறுப்பு கேப்​ட​னான ஜிதேஷ் சர்மா அசாத்​தி​ய​மான வகை​யில் மட்​டையை சுழற்றி 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​களும் விளாசி மிரட்​டி​னார். அவரது அதிரடி​யின் காரண​மாகவே பெங்​களூரு அணி வெற்றி பெற்று லீக் சுற்றை 2-வது இடத்​துடன் நிறைவு செய்ய முடிந்​தது.  வேகப்​பந்து வீச்​சாளர் ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்​ள​தால் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்​கப்​படு​கிறது. ஹேசில்​வுட் வருகை பந்​து​வீச்​சுக்கு பலம் சேர்க்​கக்​கூடும்.

இன்​றைய போட்டி நடை​பெறும்  மைதானத்​தில் நடப்பு சீசனில் பஞ்​சாப் – பெங்​களூரு அணி​கள் கடந்த ஏப்​ரல் 20-ம் தேதி லீக் ஆட்​டத்​தில் மோதி இருந்​தன. இந்த ஆட்​டத்​தில்​ பெங்​களூரு அணி 7 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.

பிளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஜூன் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.  தோல்வி அடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். எலிமினேட்டர் ஆட்டத்தில் நாளை (30-ம் தேதி) குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 1-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.
error: Content is protected !!