Skip to content
Home » காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

டில்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 தினங்களுக்கு  தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆயிரம் கனஅடி தான் கொடுப்போம் என கர்நாடகம் கூறியது. இந்த நிலையில் இன்று காலை  கர்நாடகம் தமிழகத்திற்கு  தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

கபினி, கே. ஆர்.எஸ் அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது.  இந்த தண்ணீர் நாளை இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!