Skip to content
Home » பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Senthil

சிறையில் இருந்து விடுதலையான ரவுடி கருக்கா வினோத் கடந்த மாதம் 26ம் தேதி  மது போதையில் கவர்னர் வீட்டு வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசினான். உடனடியாக அவனை போலீசார் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவனை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது  என் மகனின் மருத்துவர் கனவை நீட் மூலம் கலைத்ததால், தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

சிறையில் உள்ள கருக்கா  வினோத் மீது இப்போது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கான உத்தரவை சிறையில் உள்ள அவரிடம் கொடுத்தனர். இனி அவர் ஒருவருடம் ஜாமீனில் வெளிவர முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!