கரூர் அடுத்த கட்டளை காவிரி ஆற்றில் இருந்து கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுமார் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடியது. காவிரியில் தண்ணீர் இல்லாத
சூழலில் இருக்கும் தண்ணீரும் சாலையில் வீணாக ஓடுகிறது.
சமீப காலமாக கரூர் பகுதிகளில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.