Skip to content

தேர்தல் பணிகளை தொடங்குங்கள்…. மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்   சேர்ந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், இன்று மநீம செயற்குழு கூட்டம்  சென்னை  ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாககுழு உறுப்பினர்கள் 5 பேர்  செயற்குழு உறுப்பினர்கள் 27 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் எந்த தொகுதியில்டது. கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் இப்போதே தொடங்குங்கள்’ என்றார்.  முன்னதாக கூட்டத்துக்கு வந்த கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!