தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் , தாங்கள் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். முதல்வர் இக்கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மேயர்களுக்கு ரூ.30,000, துணை மேயர்களுக்கு ரூ.15,000, மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000, நகராட்சி தலைவர்களுக்கு ரூ.15,000, துணை தலைவர்களுக்கு ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000, பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10,000, துணை தலைவர்களுக்கு ரூ.5,000, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மாதந்தோறும் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் இந்தாண்டு ஜூலை முதலே வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
