கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று மாலை, மேட்டூர் அணி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு 60 ஆயிரம் அடி நீர் வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்தை பொறுத்து 75 ஆயிரம் முதல் ஒரு கனஅடி நீரை வெளியேற்ற உள்ளனர். 90 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை 71 முறை 100 அடியையும், 43 முறை 120 அடியையும் எட்டியுள்ளது.