தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டது . அதற்கான அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்றுக்கொண்டது. எழுத்துத்தேர்வு அக். 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025 நாள் 10.07.2025 ன் படி 2025-ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்லி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு வரும் 12.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு (நுழைவுச்சீட்டு) ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் 30.09.2025 முதல் அவர்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டனை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.