Skip to content

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (TNCPCR)
தலைவராக  புதுக்கோட்டை விஜயா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

இதையொட்டி இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களான டாக்டர் எம். கசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர், ஜெயசுதா, டாக்டர் வி. உஷாநந்தினி, . வி. செய்வேந்திரன்,  ஸ்ரீ காவியா நாகராஜன் ஆகியோரருடன்  தலைவர் புதுக்கோட்டை  விஜயா,   முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்ந்து பெற்றார்.அனைவருக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது,  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி. கீதாஜீவன், மகளிர் உரிமைத்துறை  செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் ஜானிடாம் வர்கிஸ், ஆகியோரும்  உடனிருந்தனர்.

 

 

 

error: Content is protected !!