Skip to content

ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. அன்று 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணி ஆதரவில் போட்டியிடும் மநீம தலைவர் கமல் ஆகியோர் ,  ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதரிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள  சட்டமன்ற கூடுதல் செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் வக்கீல் விலசன், அடுத்ததாக கமல், அதைத்தொடர்ந்து  கவிஞா் சல்மா,  எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கலின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலவர் உதயநிதி,  கனிமொழி எம்.பி.  டிஆர் பாலு, வைகோ,   திருமாவளவன்,  அமைச்சர்கள் எ.வ. வேலு,   ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் மாநில யெலாளர் சண்முகம்,  ஜவாஹிருல்லா,  மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிமுக வேட்பாளர்களும் இன்றுவேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
error: Content is protected !!