சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் தனி நபராக அங்கு வந்து சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார். அத்துடன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல காடுகள் கண்டனம் தரிவித்துள்ளன.