Skip to content

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு டிசி வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மாலை அணிவித்தும் கிரீடம் அணிவித்தும் மலர் கொத்துக்கொடுத்தும் பலன்கள் கொடுத்து ஜாலி ஜாலி பள்ளி திறந்துடுச்சு ஜாலி ஜாலி பள்ளி திறந்துடுச்சு என்ற முழக்கத்துடன் அனைத்து மாணவ செல்வங்களும் ஊரின் நடுவில் உள்ள கோவிலில் இருந்து அழகாக அழைத்து வரப்பட்டனர் பள்ளிவாயலில் மாணவர்கள் அனைவருக்கும் திலகமிட்டும் மலர் தூவியும் மாணவர் செல்வங்களை பாரதியார் கல்விக்கு கண் கொடுத்த காமராசர் மற்றும் அனைத்து குழந்தைகளையும் கல்வி கொடுக்கும் சரஸ்வதி தாய் மாணவர்களை வாழ்த்துவது போல மாணவர்கள் அனைவரும் உள்ளே வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் தலைமையாசிரியர் நல்லாசிரியர் இந்த அவர்கள் இனிப்பு வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி அவர்கள் தற்காலிக ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் சத்துணவு ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடநூல் பாடக் குறிப்பேடு வழங்கப்பட்டது மாணவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இன்று மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடிந்து சென்ற மாணவர்கள் ஆசிரியர் விட்டு பிரிந்து செல்லும் முடியாமல் கண்ணீர் விட்டு அழுது பின்பு அங்கிருந்து டிசி பெற்று சென்றனர்
error: Content is protected !!