Skip to content

ஜூலை 1 முதல், ரயில் கட்டணம் உயர்கிறது

  • by Authour

இந்தியாவில் தினமும் சராசரியாக 3 கோடி பேர் ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள்.  அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி  வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், ஏசி வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கு கட்டண உயர்வு இல்லை

அத்துடன் தட்கல்  டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயம் என்ற நடைமுறையும் வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க இந்த கட்டுப்பாடு கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மட்டுமின்றி, ஜூலை 15-ம் தேதி முதல் ஆதார் அடிப்படையில் ‘ஓடிபி’ எண்ணைப் பெற்று, அதை பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கூடுதல் கட்டுப்பாடும் அமலாகவுள்ளது.

இந்த ரயில் கட்ட உயர்வு திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

 

error: Content is protected !!