Skip to content

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில்
நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாநில செயலாளர் சி.திரு வேட்டை சம்மேளன மாநில சிறப்பு தலைவர் எஸ். குணசேகரன், சம்மேளன மாநில பொதுச்செயலாளர் இரா.அருள்குமார், சம்மேளன மாநில பொருளாளர் பி. குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டு லோகோவை சிஐடியு மாநில செயலாளர் சி. திருவேட்டை வெளியிட அதனை சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் திருச்சி, மதுரை புறநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் சுமைப்பணி தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலும் சில நிறுவனங்கள், வேலை உரிமையை பறிப்பதற்கு ஆதரவாக நீதிமன்றமும், காவல்துறையும் செயல்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டை வரும் செப்டம்பர் 21, 22-ந் தேதிகளில் திருச்சியில் நடத்துவது. 22-ந்தேதி மாலை நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்
சம்மேளன மாநில துணைத்தலைவர்கள் அ.பிச்சைமுத்து, த.முருகேசன், எம். அர்தநாரி, ஆர். ராஜன், அ.சுடலை காசி, சம்மேளன மாநில துணை செயலாளர்கள் அ.கோவிந்தன், ஆர்.பாண்டி, எம்.எஸ். பீர்முகமது மற்றும் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சம்மேளன துணை செயலாளர் ஆர். சிவகுமார் வரவேற்றார். முடிவில் சம்மேளனக்குழு உறுப்பினர் வி. மூர்த்தி நன்றி கூறினார்.

error: Content is protected !!