Skip to content

அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட வினோத்குமார் 09.05.2025-ந் தேதி கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வினோத்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் கவிதா கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசமி, வினோத்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வினோத்குமார் ஒரு “பாலியல் குற்றவாளி” என குண்டர் தடுப்பு ஆணை பிரதியினை, மத்திய சிறைக்காவல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!