Skip to content

ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்றார் சம்பாய் சோரன்….

  • by Authour

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையின் கஸ்டடியிலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய

tn

முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார். இதையடுத்து  சம்பாய் சோரன் ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட இருந்தது . ஆனால் ஜெ எம் எம் கட்சி எம் எல் ஏகள் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை காப்பாற்றியுள்ளனர். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை எம் எல் ஏகளை கட்சி மாறாமல் வைத்திருக்க தலைமை முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!