Skip to content

தாறுமாறாக ஓடிய கார்.. ஸ்ரீரங்கத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் காந்தி மார்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், அஸ்வந்த் ஆகிய இருவரும்  நேற்றிரவு சிட்டி முழுவதிலும் காரை ஓட்டி வந்தனர்.  அப்போது ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் கார் வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடிய கார் ஒரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்த யாசகம் எடுப்பவர்கள் ஏற்றியது. அதில் அங்கு உறங்கி கொண்டிருந்த மூன்று யாசகர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் காரை ஓட்டி வந்த இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!