திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, மாநிலம் முழுக்க கழக மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதிலுள்ள ஒவ்வொரு மண்டல வாரியாக, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 26-07-2023 (புதன்கிழமை) அன்று திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் என்ற இடத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.
டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 15 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1. அரியலூர்
2. பெரம்பலூர்
3. கடலூர் கிழக்கு
4. கடலூர் மேற்கு
5. மயிலாடுதுறை
6. நாகப்பட்டினம்
7. திருவாரூர்
8. தஞ்சாவூர் வடக்கு
9. தஞ்சாவூர் மத்திய
10. தஞ்சாவூர் தெற்கு
11. திருச்சிராப்பள்ளி தெற்கு
12. திருச்சிராப்பள்ளி மத்திய
13. திருச்சிராப்பள்ளி வடக்கு
14. புதுக்கோட்டை தெற்கு
15. புதுக்கோட்டை வடக்கு