Skip to content
Home » பிரபல இந்தி நடிகை தற்கொலை…… உருக்கமான ஸ்டேட்டஸ்

பிரபல இந்தி நடிகை தற்கொலை…… உருக்கமான ஸ்டேட்டஸ்

  • by Senthil

போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. கடந்த 2022-ல் மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில், தனது சகோதரி வீணா பாண்டே திருமணத்திற்காக கணவருடன் வந்திருக்கிறார்.

 

நேற்று முன்தினம் அம்ரிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மாலை 3.30 மணியளவில் அவரது சகோதரி அம்ரிதாவின் அறைக்க்கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும், அவர் திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அதில், “இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்’ என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அம்ரிதா பாண்டேவின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!