தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதி்கள் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதுபோல நீலகிரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் பமழை பெய்தது. திருச்சியில் இன்று வழக்கமான வெயிலைவிட குறைவாகவே காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை கரணமாக இன்று குற்றால அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து மழை நீடித்தால் அருவிகளில் மேலும் தண்ணீர் கொட்டும். அப்போது சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதேபோல, நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.