Skip to content

தூத்துக்குடி

கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிவகமலா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.… Read More »கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (48). இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான்.… Read More »3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த… Read More »தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

  • by Editor

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத்… Read More »2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாக்கியம் (51). இவர்களது மகன் வேலுச்சாமி(32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வேலுச்சாமி மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை… Read More »மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரெயில்வேகேட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சண்முகத்தாய்(எ) சுமித்ரா (35). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக கணவரைப் பிரிந்து… Read More »குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் இவரது மனைவி கவுசல்யா திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 14-ம் தேதி… Read More »தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் போது விஷவாயு தாக்கியதில் நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை… Read More »தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப்… Read More »வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் ஆத்திரமடைந்த… Read More »போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி

  • by Editor

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனம் மூலம் கன்னியாகுமரிக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த… Read More »சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: ஓடும் வேனில் இருந்து விழுந்து மாணவன் பலி

மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

  • by Editor

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.… Read More »மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

  • by Editor

த.வெ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும்… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர கொன்னு குவிச்சிங்களே-செங்ஸ் கேள்வி

குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்,… Read More »குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனம் செண்பகநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (43), கோவில்பட்டி பிரதான சாலையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக இரவு வியாபாரம் முடிந்த பிறகு, ஓட்டலின் உள்புறக்… Read More »ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு – போலீஸ் வலைவீச்சு

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது

காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர்… Read More »காதலன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண் – காதலியின் தாய் மற்றும் சகோதரர்கள் வீடு புகுந்து தாக்குதல்

தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தருவைகுளத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் லட்சத்தீவு… Read More »தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது

கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

  • by Editor

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல் குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும்… Read More »கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Editor

தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம்… Read More »முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை… Read More »மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல்… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

  • by Editor

தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன. குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும்… Read More »SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

  • by Authour

தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு… Read More »பல நூற்றாண்டுக்கு பிறகு தூத்துக்குடி-திருநெல்வேலியில் பெரிய மழை

இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி… Read More »இன்று சூரசம்ஹாரம்–குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை… Read More »தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் 2 பேருக்கும் மது… Read More »குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….

தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும்… Read More »தூத்துக்குடி துறைமுகத்தில் 40% வர்த்தகம் பாதிப்பு ..?

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள்  மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது: தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்.  தொழில் வளர்ச்சிக்காக  தமிழ்நாட்டில் சிறந்த… Read More »4 வருடத்தில் ரூ,10.3 லட்சம் கோடி தொழில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது… Read More »சேலம் ரவுடி கொலை… தூத்துக்குடியை சேர்ந்த 7 ரவுடிகள் கைது

வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி… Read More »வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள்  அமைச்சர்  சண்முகநாதன். இவர்  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி  மாநகராட்சி  அதிமுக கவுன்சிலர்.  ராஜா மீது பல்வேறு   வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது.  இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது  போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.… Read More »தூத்துக்குடி துப்பாக்கிசூடு 7ம் ஆண்டு நினைவு தினம்

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று… Read More »தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே ஜோதி நகரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ ஜெ நகர் பகுதியில் கடற்கரையோரம் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை சார்பு… Read More »திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

“அரிசி” சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவி பலி…. தூத்துக்குடி அருகே பரிதாபம்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவினை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி பேச்சியம்மாள். இந்த தம்பத்திக்கு 3 குழந்தைகள். இதில் 2வது… Read More »“அரிசி” சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவி பலி…. தூத்துக்குடி அருகே பரிதாபம்..

தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ.17,000 கோடியில் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது வின்பாஸ்ட் நிறுவனம். ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான… Read More »தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

  • by Authour

தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.… Read More »திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…

“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் போலி சாமியார் ஆன இவர் அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் ஆசிவாரத்தை கூறி மோசடியில் தொடர்ந்து… Read More »“துண்டுக்குள்ள பணம் வரும்”… கோடிகளை சுருட்டிய அருள் வாக்கு ஆசாமி…

பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

அரசு பள்ளிகளில் படித்து  பின்னர்  அரசு  கல்லூரிகளில்   சேரும்  மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அரசு  வழங்கி வருகிறது.   அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இந்த திட்டத்தை  விரிவு படுத்த… Read More »பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,… Read More »14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்,… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,… Read More »நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

ராஜபாளையம்  திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி… Read More »மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு… Read More »மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில்… Read More »தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள்… Read More »வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம்… Read More »2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

  • by Authour

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதே… Read More »பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த… Read More »தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள  மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை… Read More »தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

கோவை மாவட்டத்திற்கு  தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, கோவை பயங்கரவாத… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்பும்  திமுகவினர்  கடந்த 1ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில்  விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.  7ம் தேதி  மாலை வரை மனு அளிக்கலாம். அதன்படி தூத்துக்குடி தொகுதி  எம்.பியும், … Read More »தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி…. கனிமொழி எம்.பி. விருப்பமனு

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில்  2 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.  பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவில் மதுரையில் தங்கினார்.   இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான… Read More »பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூர்க்கு… Read More »விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்…. காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி

நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

  • by Authour

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு… Read More »நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..

தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை கிராமத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அன்று (27/12/2023) திமுக துணைப் பொதுச்… Read More »தூத்துக்குடியில் உதவிகேட்ட சிறுமிக்கு கண் ஆபரேசன்…கனிமொழிக்கு பாராட்டு…

விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

  • by Authour

எந்த உயரத்தில் இருந்தாலும் தான் சாமானிய மனிதன் என்பதை எந்த காலகட்டத்திலும் மறந்திடாத மாமனிதர் நடிகர் விஜயகாந்த் என கனிமொழி எம்பி புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நடிகர் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் மறைவு… எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு… எம்பி கனிமொழி…

தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில். நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…. நிர்மலா சீதாராமன் ஆய்வு

அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மிக் ஜாம் புயலால் தொடர் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து… Read More »அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..

தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அருகில் உள்ள ஏரி, குளங்கள்  உடைந்து பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. தாமிரபரணி கரையில் உள்ள… Read More »தூத்துக்குடி ….மார்க்கெட்டில் வெள்ளம்… பல கோடி உணவு தானியங்கள்… ரோட்டில் கொட்டிய வியாபாரிகள்

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – காயல்பட்டினம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். பொதுமக்களின் தேவைகளைக் கேட்டு… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய எம்பி கனிமொழி..

தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தூத்துக்குடியில் மழை வௌ்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அந்தோணியார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார்.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட… Read More »தூத்துக்குடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.… Read More »தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம்… Read More »நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள பழைய காயல்பட்டினம் பகுதியை,  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன்> நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து பார்வையிட்டு ஆய்வு… Read More »தூத்துக்குடியில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு….

தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

  • by Authour

தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை… Read More »தூத்துக்குடி நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம்…… காணொளி மூலம் முதல்வர் ஆறுதல்

வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில்  ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று… Read More »வௌ்ளம்…..ஹெலிகாப்டரிலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது..

3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர்… Read More »3 தினங்களுக்கு பின்னர்…. தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

  • by Authour

தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் ஆய்வு

திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

  • by Authour

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பாக பணியாற்றினர். தற்போது… Read More »திருச்சி தூய்மை பணியாளர்கள் 300 பேர்…….தூத்துக்குடி பயணம்

தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற… Read More »தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி… Read More »தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

  • by Authour

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு… Read More »திருநங்கைகளுக்கு விருது….. தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி. வழங்கினார்…

தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

  • by Authour

தூத்துக்குடி மக்களின் தந்தை’ என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  154வது பிறந்தநாளான இன்று (15/11/2023) தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »தூத்துக்குடி ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 154வது பிறந்தநாள் விழா…..சிலைக்கு கனிமொழி எம்.பி. மரியாதை

பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

  • by Authour

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்க திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி… Read More »பாஜ.,ஆட்சி…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்.பி…

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

  • by Authour

தூத்துக்குடியை சார்ந்த ரவி பகதூர் என்பவர் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த குடுகுடுத்தானூரில் மணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாத காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

  • by Authour

தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்திற்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது 34-வது… Read More »கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த நடிகர் விஷால்….

எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து… Read More »எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே, கோவில்பந்து ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் எனும் 53 வயது அரசு ஊழியரை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ,… Read More »தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு…. குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் விதிப்பு ….

எட்டயபுரம் …பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு அருந்திய கனிமொழி எம்.பி.

  • by Authour

1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு காலை உணவு திட்டம் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் 25ந்தேதி… Read More »எட்டயபுரம் …பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு அருந்திய கனிமொழி எம்.பி.

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி  பனிமயமாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை… Read More »தூத்துக்குடியில் பனிமயமாதா…தங்கத்தேர் பவனி….. பக்தர்கள் வெள்ளம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

தூத்துக்குடி விஏஓ அப்பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. இதேபோல், சேலம் ஓமலூரில் விஏஓ மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரை… Read More »விஏஓக்களுக்கு துப்பாக்கி.. டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உள்துறை..

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை  தூத்துக்கடி ஆட்சியர் செந்தில்… Read More »ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட  திமுக  செயலாளராக பணியாற்றி,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று (26/05/2023) அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட… Read More »தூத்துக்குடி பெரியசாமி நினைவு தினம்…. எம்.பி.கனிமொழி, அமைச்சர் நேரு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவுநாள்  நிகழ்ச்சி   தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது., துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட  13  பேரின்  திருவுருவப் படங்களுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. எம்பி கனிமொழி மரியாதை…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 5ம் ஆண்டு நினைவு தினம்…. இன்று அனுசரிப்பு

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை.. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத்… Read More »சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

  • by Authour

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர்… Read More »697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு… Read More »திருச்செந்தூர் பாதாள சாக்கடை பணி 2 மாதத்தில் முடியும்…அமைச்சர் நேரு

error: Content is protected !!